Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நாம மகிமை
 
பக்தி கதைகள்
நாம மகிமை


கலியுகத்தில் ராம நாம ஜபத்தை யார் செய்தாலும் முக்தி உண்டு என வாழ்ந்து காட்டிய மகான் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்.  இவர், காஞ்சி மடத்தின் 59– வது பீடாதிபதியாக திகழ்ந்தவர். தினந்தோறும் லட்சத்து எட்டாயிரம் முறை ராம நாமம் ஜபித்தவர். இந்த ‘‘ராம நாமம்’’சம்பிரதாயத்திற்காக சுவாமிகள் இயற்றிய நுால்கள் ஏராளம்.
ஒருசமயம் தஞ்சை மாவட்டம் பெரம்பூர் என்னும் கிராமத்தில் அன்பர்களுடன் ராம நாம பிரசாரத்தில் பல நாட்கள் ஈடுபட்டிருந்தார். சுவாமிகள் மீது அன்பு கொண்ட ஒருவர் தன் வீட்டில் பிட்சை ஏற்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். அதன்படியே அங்கு அடியார்களுடன் பிட்சை ஏற்க வந்தார் சுவாமிகள். அவருக்கு பிட்சையிட்டதில் பட்சணங்களும் வைக்கப்பட்டிருந்தது.  அதனை அவ்வீட்டில் உள்ள சிறுவன் பசியால் ஜாடை காட்டி வேண்டும் என கேட்டு அழுவான். வாய்பேச முடியாத சிறுவனின் நிலையை கண்ட சுவாமிகள் வேதனை அடைந்தார். தினந்தோறும் நாம ஜபம் செய்தும் இவனுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என்ற துயரம் மேலும், அவரை வாட்டியது. பிட்சையில் இருந்து பாதியில் எழுந்து வந்த அவரை அனைவரும் வணங்கி நின்றனர். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
பசியின் மிகுதியால் சிறுவன் ஓடிச் சென்று  இலையிலிருந்த மிஞ்சிய உணவை சாப்பிடுவான்.  எந்தநேரமும் ராமநாமம் ஊறிய நாவில் பட்ட எச்சில் உணவை அல்லவா அவன் உண்டது! உடனே அவனது கண்களில் கண்ணீர் பெருக..உடல் சிலிர்க்க..  “ராம நாமம்’’ சொல்வதை அங்கிருந்த அனைவரும் கேட்பர். அவனுக்கு ஆசி வழங்கிய சுவாமிகள் ஞான உபதேசமும் செய்வர். சிலநாட்கள் கழித்து தன் பாதுகைகளைத் தந்து அவனை அர்ச்சராக்கி விட்டு அவ்வூரிலிருந்து புறப்பட்டார்.  பெரம்பூர் மக்கள் பஜனை மடம் ஒன்றை நிறுவி இன்றும் அதற்கு வழிபாடு செய்து வருகின்றனர். இதைத்தான் ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாகவதர்கள் சாப்பிடும் உணவின் மீதம் (எச்சில்) புனிதனமானது என்றும், அது எல்லாவற்றையும் செய்ய வல்லது என கூறுவார். அதற்கு இலக்கணமாக அச்சம்பவம் விளங்கியது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar