Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
யானை முடுக்கு; பூனை முடுக்கு இரவிலும் நீராடும் தீர்த்தம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயில் மீது அக்கறை கொண்ட மனிதன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
09:04


பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னன் தன் மனைவியுடன் தீர்த்தயாத்திரை கிளம்பி காசி விஸ்வநாதரைத் தரிசித்து வந்தான். ஒரு சமயம் மன்னனின் கனவில் காசி விஸ்வநாதர் தோன்றி, தென்னாட்டிலும் தனக்கொரு ஆலயம் கட்டும்படி கட்டளையிட்டார். எந்த இடத்தில் கட்டுவது என்று மன்னன் குழம்பிக் கொண்டிருந்தான். ஒரு நாள் செண்பக வனமாக இருந்த காட்டுப்பாதையில் எறும்புகள் சாரை சாரையாகச் செல்வதைக் கவனித்தான். பராக்கிரம பாண்டியன் அதைப் பின்தொடர வழியில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். தான் கனவில் கண்ட காசிவிஸ்வநாதப் பெருமானே அங்கு லிங்கவடிவத்தில் இருப்பதாக அவன் மனதிற்கு தோன்றியது. சிவாலயம் கட்டும் திருப்பணிகளை மன்னன் மேற்கொண்டான். கோயிலைக் கட்டி முடிக்க ஆறுஆண்டுகள் ஆனது. தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் சிவனுக்காக அர்ப்பணித்த மன்னன் கோயிலில்,""கோயிலைக் கட்டுவது எளிது. ஆனால் அக்கோயிலைப் பராமரிப்பது அரிது. வருங்கால சந்ததியினர் அக்கறையுடன் இக்கோயிலைப் பராமரிக்கவேண்டும் என்றும், அப்படி பாதுகாப்பவர்களின் காலில், இப்போதே விழுந்து வணங்குகிறேன், என்று பாடலாக கல்வெட்டில் குறிப்பிட்டான். மதுரையிலிருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலே இது. இத்தலத்தில் காசியைப் போன்று சுவாமிக்கு "விஸ்வநாதர் என்று பெயர் இருந்தபோதிலும், விசாலமான உலகத்தை ஆளும் அம்மனுக்கு விசாலாட்சி என்பதற்குப் பதிலாக "உலகம்மன் என்ற தமிழ்ப்பெயர் சூட்டியுள்ளனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar