Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
விஜயவாடா கனகதுர்கை நரைத்த தலையா...கவலைப்படாதீங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடிக்கிற கை தான் அணைக்கும் ..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
06:11


கடவுள் பற்றி விளக்கம் தருகிறார் புதுச்சேரி மகான் (அரவிந்தர்)

*சிறந்த நண்பர் கடவுள் மட்டுமே. நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்குஅறிவார்.
*கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே கிடையாது. நலத்தையோ அல்லது நலம் உண்டாக்கும் முயற்சியோ தான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.
*காலணி இல்லாமல் மிகக் கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி, அன்பு என்னும் பாதத்திற்கு மட்டுமே இருக்கிறது.
*சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்துவிடக்கூடாது. அதிலிருந்து விலகி, அதன்காரணத்தைக் கண்டறியுங்கள். அதைப் போக்கும் முயற்சியில் இறங்குங்கள்.
*நேர்மை உங்களிடம் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவதைக்கண்கூடாகக் காண்பீர்கள்.
*மனிதர்களை நேசித்து அவர்களுக்குத் தொண்டுசெய்யுங்கள். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
*நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழவேண்டும். நற்பணிகளில் எப்போதும் ஈடுபட வேண்டும். இதற்காகவே மனித உடல் நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
*எவரையாவது ஏளனம் செய்யத் தோன்றினால், உங்களின் உள்ளத்தை உற்று நோக்குங்கள். உங்களிடமும் மடமைஎன்னும் குணம் இருப்பதைக் கண்டு, நீங்களே சிரித்துவிடுவீர்கள்.
*பிடிக்காத ஒரு விஷயத்தைக் கேட்க நேர்ந்தாலும், பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து பார்த்து அதிலுள்ள உண்மையைக்கண்டுபிடியுங்கள்.
*கடவுளின் கண்ணுக்கு அற்பமானது என்று எதுவும் கிடையாது. அதுபோல உங்களின் கண்ணுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்கவேண்டாம்.
*வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், கடவுளின் நினைவோடு இருக்க வேண்டும்.
*உத்தம செயல்களைச் செய்ய விரும்பினால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது. பிறருக்கு சேவை செய்யும் பொதுநலத்துடன் வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும்.
*இன்பம் தரும் கற்பனைகளைவிட்டொழித்து கண்களைத் திறந்து பாருங்கள். உலகத்தையும் , உலகத்தைப் படைத்தகடவுளையும் உள்ளபடி உணர முற்படுங்கள்.
*பகைவர்கள் யாரும் நமக்குவெளியில் இல்லை. சுயநலம், கோழைத்தனம், பயம் போன்ற தீயஎண்ணங்கள் நமக்குள்ளேயே இருந்து நம்மை ஆட்டுவிப்பதை நன்றாகஉணருங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar