Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
அளவுக்கு மீறினால்.... நன்மையும், தீமையும் ஒன்றே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொரோனாவை ஒழிப்போம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
05:05


கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கிறது. நோய் தடுப்புக்கான பரிந்துரைகளில் ‘பயணத்தைத் தவிருங்கள்’ என்பதும் ஒன்று. அதாவது நோய் பரவியுள்ள இடங்களுக்கு செல்லவோ, அங்கிருப்பவர்கள் மற்ற பகுதிக்கு வெளியேறவோ கூடாது.
ஒருமுறை மதீனாவில் இருந்து கலீபா உமர் மக்களின் நிலையை காண சிரியாவுக்குச் சென்றார். வழியில் அங்கு கொள்ளை நோய் பரவியிருப்பதாகச் செய்தி கிடைத்தது.
மதீனா திரும்புவதா? அல்லது பயணத்தை தொடர்வதா?  தளபதிகளிடம் ஆலாசித்தார்.
‘‘இறைவன் மீது பாரத்தை வைத்து விட்டுப் பயணத்தைத் தொடருங்கள்” என்றனர் சிலர். இன்னும் சிலர் “வேண்டாம்... பயணம் செல்வது ஆபத்து. உடனடியாக நாடு திரும்புவோம்’’  என்றனர். குழப்பத்தில் ஆழ்ந்த உமர், நபித்தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு என்பவரிடம் ஆலோசனை கேட்டார்.  
“நோய் பரவியிருப்பதாக அறிந்தால் போக வேண்டாம். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு நோய் பரவினால் அந்த ஊரை விட்டும் வெளியேறாதீர்கள்’ என நாயகம் சொல்ல கேட்டிருக்கிறேன்’’ என்றார்.
உடனே உமர் மதீனாவுக்குத் திரும்பினார். தொற்று சமயத்தில் பயணத்தை தவிர்ப்பதோடு சுகாதாரமாக இருப்பது அவசியம். பல் துலக்குதல், சோப்பால் கைகளைக் கழுவுதல், நாசியைத் துாய்மை செய்தல், காலணியுடன் வெளியே செல்லுதல், தும்மல், இருமல் வந்தால் தனிமையில் இருத்தல் போன்ற வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தர்மச்செயல்களான இவற்றை முடிந்தவரை செய்தால் இறையருளால் மறுமையில் நற்கூலி கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar