Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
அன்பின் தாகம் தணிந்தது திருப்தியுடன் வாழ்வோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விட்டுக்கொடுப்போம்! மகிழ்வோம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2021
07:05


எல்லோரது வாழ்விலும் ஏதாவதொரு பிரச்னை இருக்கவே செய்யும். இருள் இருந்தால் தானே ஒளியின் அருமை தெரியும். பிரச்னை வருவதே நிம்மதியின் அருமையை நமக்கு உணர்த்தவே.  பிரச்னை வரும் போது அதை ஒருவர் எதிர்கொள்வதைப் பொறுத்தே வெற்றியாளர், தோல்வியாளர்கள் உருவாகிறார்கள்.
அதிலும் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை வரும் போது சொல்லவே வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களில் கூட பொறுமை இல்லாமல், விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் நடந்து கொள்கின்றனர். விளைவு விரிசல் பெரிதாகி விவாகரத்து வரைக்கும் சென்று விடுகிறது.
அந்த மனிதர் அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உணவில் சிறு கற்கள் இருப்பதை உணர்ந்தார். ‘‘ ஏன்... இவள் இவ்வளவு அஜாக்கிரதையாக சமைக்கிறாள்?’’ என எண்ணிய படியே நறுக்கென கல்லைக் கடித்து விட்டார். பக்கத்தில் இருந்த மனைவி. ‘‘என்ன கல்லைக் கடித்து விட்டீர்களா?’’ எனக் கேட்டாள்.
கோபத்தை வெளிப்படுத்தாமல் சிரித்தபடி ‘‘ஆங்காங்கே கொஞ்சம் சோறும் இருக்கிறதே... பரவாயில்லை’’ என்றார்.
கணவன் சொன்ன வார்த்தைகள் மனைவியை மிகவும் பாதித்தன. இனி சமைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என மனதிற்குள் உறுதி கொண்டாள்.
ஒருவேளை கணவர் இதை வைத்து சண்டை போட்டிருந்தால்... நிலைமை தலைகீழாக இருந்திருக்கும்.  குடும்பத்திற்குள் விட்டுக்கொடுத்து சென்றால் மகிழ்ச்சியாக வாழலாம்.
‘ஆம், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது’ என்கிறது பைபிள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar