Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நல்லதைச் செய்யுங்கள் நெஞ்சம் மறப்பதில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகில் சிறந்த காய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
10:06


மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார் முல்லா. அப்போது அடிக்கடி மன்னருடன் சேர்ந்து உணவு சாப்பிடுவார். ஒருநாள் உணவில் பீன்ஸ் சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிக பசி என்பதால் பீன்ஸ் காயை விரும்பிச் சாப்பிட்டார். அப்போது ‘‘உலகிலேயே சிறந்த காய் பீன்ஸ் என்று தோன்றுகிறது. நீர் என்ன நினைக்கிறீர்?" எனக் கேட்டார் மன்னர்.
‘‘சந்தேகமில்லை மன்னா...பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்ல முடியாது’’ என்றார் முல்லா.
உடனே சமையற்காரனை அழைத்து, ‘‘இன்று முதல் பீன்ஸ் காய்க்கு தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் பீன்ஸ் சேர்த்து விடு"  என உத்திரவிட்டார்.
தொடர்ந்து பீன்ஸ் சாப்பிடவே மன்னருக்கு சலிப்பு ஏற்பட்டது.
மீண்டும் ஒருநாள் மன்னருடன் உணவு சாப்பிட்ட அமர்ந்தார் முல்லா. அப்போது உணவில் பீன்ஸ் பரிமாறப்பட்டது. அப்போது மன்னர், ‘‘உலகிலேயே மிக மோசமான காய் பீன்ஸ் என நினைக்கிறேன். முல்லா... நீர் என்ன நினைக்கிறீர்’’ எனக் கேட்டார்.
‘‘ஆம் மன்னா...எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது’’ என்றார்.  
‘‘ பத்து நாட்களுக்கு முன்பு சிறந்த காய் பீன்ஸ் என்றீரே...இப்போது தலைகீழாக மாற்றுகிறீரே" என்றார் மன்னர். சிரித்தபடி முல்லா, ‘‘என்ன செய்யட்டும் மன்னா... நான் வேலை பார்ப்பது  தங்களிடம் தானே... பீன்ஸ் காயிடம் இல்லையே’’ என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar