Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கருணை மழையே கலைவாணி கல்விக்கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
படிப்பில் சிறக்க மஞ்சள் பூசுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
07:10


தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பஸாரா சரஸ்வதி கோயில் புகழ் மிக்கது.  இந்த அம்மனின் பிரசாதமான மஞ்சளை நெற்றியில் பூசினால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.  
மகரிஷி வியாசர் கோதாவரி நதிக்கரையிலுள்ள குமராஞ்சலா மலைப்பகுதியில் தவம் மேற்கொண்டார். அவருக்கு காட்சியளித்த சரஸ்வதி ஞானம் அளித்ததோடு, ‘‘ நான் எழுந்தருளிய இத்தலத்தில் மகாலட்சுமி, மகாகாளியுடன் என் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக’’ எனக் கட்டளையிட்டாள். அதன்படி வியாசரும் பிரதிஷ்டை செய்ய  இத்தலத்திற்கு ‘வியாசபுரி’ எனப் பெயர் வந்தது. காலப்போக்கில் ‘வஸாரா’ எனத் திரிந்து தற்போது ‘பஸாரா’ என்றானது.  
 மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் இருக்கும் இக்கோயிலுக்குள் நுழைந்ததும் சூர்யேஸ்வர சுவாமி என்னும் பெயரில் சிவன் சன்னதி உள்ளது. தினமும் இவர் மீது சூரியக்கதிர்கள் விழுவதால் இப்பெயர் ஏற்பட்டது. கருவறையில் ஞானசரஸ்வதிதேவி வீணை, அட்சர மாலை, ஏடு தாங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள மலையின் பெயரால் சரஸ்வதிக்கு  ‘குமாராஞ்சல நிவாசினி’ என்றும் பெயருண்டு. அருகில் மகாலட்சுமி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். பிரகாரத்தில் மகாகாளிக்கு தனி சன்னதியில் இருக்கிறாள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்கு வந்து பெற்றோர் அபிஷேகம் செய்து அம்மனுக்கு வெண்பட்டு உடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
புதன்கிழமைகளில் காலை 6:00 – 7:00 மணிக்குள் நெய்தீபமேற்ற கல்வி வளர்ச்சி ஏற்படும்.  ஞானசரஸ்வதியின் மீது பூசியுள்ள மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இதை நெற்றியில் பூசினால் குழந்தைகளின் கற்கும் திறன் மேம்படும். சரஸ்வதி பூஜையன்று கோயிலே விழாக்கோலம் பூண்டிருக்கும். கோயிலை ஒட்டிய குகையில் வியாசருக்கு சன்னதி உள்ளது.
செல்வது எப்படி
* ஐதராபாத்திலிருந்து 220 கி.மீ.,
* நிஜாமாபாத் நகரிலிருந்து 30 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar