Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இறந்தவர் நினைவு தினத்தில் ... இந்த வீடு எல்லாருக்கும் சொந்தம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாசம் காட்டி ஆசை வைத்தால் மிருகம் கூட தெய்வமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
09:04


காஞ்சி சங்கரமடத்தில் கஜ பூஜை, கோ பூஜை விசேஷமாக நடக்கும். மடத்திலேயே இதற்காக பசுக்களும், யானைகளும் இருந்தன. இந்த பூஜைகளைத் தரிசித்து தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்காகப் பக்தர்களும் திரளாக வந்து கூடுவர். 1930 ஜூலையில், ஆரணியை அடுத்த பூசைமலைக்குப்பம் என்னும் இடத்தில் இரண்டு மாதம் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சிப்பெரியவர் மேற்கொண்டார். எந்த வித வசதியும் இல்லாத காட்டுப்பகுதியான அங்கும் கூட, பக்தர்கள் பெரியவரைத் தேடி வந்து தரிசித்தனர். காஞ்சிபுரம் மடத்தில் இருந்த யானையும், அங்கு கொண்டு வரப்பட்டு ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டது. அதனருகில் கீற்று வேயப்பட்ட கொட்டகைகள் இருந்தன. ஒருநாள் இரவு அதில் தீப்பற்றியது. நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் இதைக் கவனிக்கவில்லை. பக்கத்தில் கட்டப்பட்டிருந்த யானை தீயின் உஷ்ணம் தாங்காமல் சங்கிலியை அறுத்துக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டது. யானை ஓடிய தடயமும், கொட்டகை எரிந்து கிடப்பதையும் கண்ட மடத்து ஊழியர்கள் நடந்ததை யூகித்துக் கொண்டனர். நாலாபுறமும் காட்டுப்பகுதியில் யானையைத் தேடத் தொடங்கினர். ஆனால், யானை எங்கும் தென்படவில்லை. இரண்டு நாளுக்குப் பின் ஏழெட்டு கி.மீ., துõரத்தில் குளக்கரை ஒன்றில் யானை சுற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. பாகனுடன் மடத்து ஊழியர்கள் அந்த இடத்திற்குச் சென்றனர். எவ்வளவோ முயற்சித்தும், வணங்காமுடியான யானை அங்கிருந்து வர மறுத்தது. இதையறிந்த பெரியவர் நேரில் அங்கு சென்றார். அவரைக் கண்டதும் யானை துதிக்கையை வளைத்து எழுந்து நின்றது. அதன் உடலில் தீப்புண்கள் இருப்பதைக் கண்ட பெரியவர், அன்புடன் கைகளால் தடவிக் கொடுத்தார். கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். பாகனுக்கோ, யானையோடு பழகிய மற்றவர்களுக்கோ பணியாத யானை, பெரியவரின் அன்பான முகத்தையும், பாசத்தையும், உபசரிப்பையும் கண்டதும் பணிந்ததை அறிந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். (மகான் காஞ்சிப் பெரியவர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar