Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மனத்திருப்தி வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாதனையாளராக மாற...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
10:07


பட்டுப்புழு ஒன்று கூட்டிலிருந்து வெளிவர கஷ்டப்பட்டு முயற்சித்தது. இதைப்பார்த்த கிறிஸ்டோபர் கத்தியால் மெதுவாக கூட்டை வெட்டி, அதை சுலபமாக வெளியே எடுத்தான். ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. பாவம்  கீழே விழுந்துவிட்டது. இறுதியில் எறும்புகளுக்கு இரையானது. இந்த செயல் அவனது மனதை உலுக்கியது.
இதையெல்லாம் கவனித்த அவனது அம்மா, ‘‘மகனே.. அந்தப்பூச்சி கூட்டிலிருந்து வெளிவர எடுக்கும் முயற்சியால் அதன் உடல் வற்றும். தசை, நரம்புகள் பலமாகும். இந்த பொறுமைதான் அதை பறக்க வைக்கும். ஆனால் உனது அவசரம் அதை கொன்றுவிட்டது’’ என்றார்.
பார்த்தீர்களா.. இதுபோல்தான் நாமும். பல பிரச்னைகளை பொறுமையாக எதிர்கொண்டால், சாதனையாளராக மாறலாம். ..............
உயர்ந்தாலும் சரி! தாழ்ந்தாலும் சரி!
ஆண்டர்சன் என்பவர் ஏழ்மையில் வாடி வந்தார். இதைப்பார்த்து வருந்திய அவரது நண்பர், மூடை துாக்கும் வேலையை அவருக்கு ஏற்பாடு செய்தார். அங்கே ‘இத்தனை மூடை துாக்கினால் இவ்வளவு சம்பளம்’ என கணக்கு இருந்தது.
முதல்நாள் அங்கு வேலைக்கு சென்றார் ஆண்டர்சன். கடைக்குள் நுழையும்போதே முதலாளி ஒரு தொகையை அவரிடம் நீட்டினார்.
‘‘ஐயா.. எதற்காக இதை கொடுக்கிறீர்கள்’’ எனக்கேட்டார்.
‘‘தம்பி.. உன் குடும்ப சூழலை, உனது நண்பர் என்னிடம் சொன்னார். ஒருநாளைக்கு நீ இத்தனை மூடை துாக்குவாய் என கணக்கு வைத்து, இந்த சம்பளத்தை கொடுத்துள்ளேன். நீ நிறைவாக வேலை செய்வாய் அல்லவா...’’ என்றார் முதலாளி.
‘‘உங்களின் நல்ல மனம் எனக்கு புரிகிறது. இருந்தாலும் எனக்கு இது உறுத்தலாக இருக்கும். வேலை செய்த பிறகுகூட சம்பளத்தை பெற்றுக்கொள்கிறேனே’’ என இழுத்தார் ஆண்டர்சன்.
‘‘ஏன்? இது குறைவாக உள்ளதா...’’ எனக்கேட்டார் முதலாளி.
‘‘ஐயா.. நான் அந்த நோக்கில் சொல்லவில்லை. நான் இந்த வேலைக்கு புதிது. என்னால் எத்தனை மூடை துாக்க முடியும் என்று தெரியாது. எனவே நான் வேலையை முதலில் முடித்துவிடுகிறனே். தவறாக நினைக்காதீர்கள்’’ என மனதில் இருப்பதை இறக்கிவிட்டு, மூடையை துாக்க சென்றார் ஆண்டர்சன்.
பார்த்தீர்களா.. இவரைப்போல் நாமும் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் அல்லவா.. அதாவது உங்களின் ஆற்றல் உங்களுக்குத்தான் தெரியும். இப்படி உங்களை அறிந்தால், வாழ்வில் உயர்ந்தாலும் சரி. தாழ்ந்தாலும் சரி. எதற்கும் மயங்க மாட்டீர்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar