Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
திருப்தியுடன் வாழ்வோம் வளமான வாழ்க்கை அமைய…
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கேட்டு வாங்கிய வரட்டிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2021
07:05

அவள் ஓர் ஏழை மூதாட்டி. நாள்தோறும் மடத்திற்கு வருவாள். காஞ்சி மகாபெரியவரை கண்குளிர தரிசனம் செய்து விட்டு  வீட்டிற்குப் போவாள். இப்படி வரும்போதெல்லாம் மடத்திற்கு வரும் பலரை பார்த்தாள். பல செல்வந்தர்கள் மகாபெரியவரை தரிசிப்பதற்காக வரிசையில் நின்றார்கள். பூ, பழம் போன்றவற்றைத் தட்டில் வைத்து காணிக்கையாகக் கொடுத்தார்கள். இன்னும் பலர் மடம் செய்யும் நற்பணிகளுக்கு நன்கொடை அளித்தனர்.
 ஏழ்மை காரணமாக தன்னால் எதுவும் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மூதாட்டிக்கு எழுந்தது. ஒருநாள் தன் இயலாமை குறித்து வருத்தம் ஏற்படுவதாக அவள் மகாபெரியவரிடமே சொல்லி விட்டாள். அவள் நாள்தோறும் தன்னை தரிசிக்க வருவதைக் கவனித்துவந்த மகாபெரியவர் கனிவு பொங்கப் பார்த்தார்.
‘‘யாரிடமும் நான் எதையும் கேட்பதில்லை. அவர்களாகக் கொண்டுவருகிறார்கள். அதை அப்படியே தர்ம செயல்களுக்கு திருப்பி விடுகிறேன். அவ்வளவு தான். அவர்களும் எனக்கு எது வேண்டும் என்றோ என் மனசுக்கு எது பிடிக்கும் என்றோ கேட்டுக் கொடுப்பதில்லை. மடத்தை நடத்த என்னவெல்லாம் தேவைப்படும் என்று அவர்களாக அனுமானித்து அதன்படி கொண்டுவருகிறார்கள். ஆனால் நீ ஒன்று செய்யேன். எனக்கு எது பிடிக்குமோ அதை நீ கொடுக்கலாமே.. உன்னால் கொடுக்க முடியக் கூடியதைத்தான் நான் கேட்பேன். உனக்குச் செலவு வைக்கமாட்டேன். கொடுப்பாயா...’’ எனக்கேட்டார்.  
‘‘என்னால் முடியக் கூடியது எதுவானாலும் கட்டாயம் கொடுப்பேன்’’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் மூதாட்டி.
‘‘மடத்தில் நாள்தோறும் ஏதாவது ஹோமம் விடாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஹோமத்தில் போட நல்ல பசுஞ்சாணியில் செய்த வரட்டியைத் தான் பயன்படுத்த வேண்டும். மடத்தில் மாட்டுக் கொட்டிலில் நிறையப் பசு மாடுகள் இருக்கின்றன. பசுஞ்சாணத்திற்குப் பஞ்சமே இல்லை. ஆனால் அதை வரட்டியாகத் தட்டிக் காயவைத்துக் கொடுக்கத்தான் ஆள் இல்லை. நீ ஒரு கூடையில் அந்தச் சாணியை எடுத்துக் கொண்டு போய் வரட்டி தட்டிக் காயவைத்து எனக்குக் கொண்டுவந்து கொடேன். நீ தரும் வரட்டியை நான் மடத்தில் நடைபெறும் ஹோமத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். இது உன்னால் சுலபமாக முடியக் கூடியதுதானே..செய்கிறாயா..’’ என்றார்.  
சொடக்கினால் லட்ச ரூபாய்க்குக் கூட வரட்டிகளைக் கொண்டு வந்து அடுக்க எத்தனையோ செல்வந்தர்கள் காத்திருக்கும்போது, அந்த ஏழை மூதாட்டியிடம் வரட்டி தட்டித் தரும்படிக் கேட்டார் மகாபெரியவர்.
சுவாமிகள் தன்மேல் செலுத்தும் அன்பையும் அவரது கருணையையும் நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘செய்கிறேன் சுவாமி. கட்டாயம் செய்கிறேன்!’’ என்று அந்தக் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்து நிம்மதி பெற்றாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar