Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கேட்டு வாங்கிய வரட்டிகள் காஞ்சி மகாபெரியவரை தரிசிப்போம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வளமான வாழ்க்கை அமைய…
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2021
07:05


ரவீந்திரன் என்பவருக்கு இரண்டு மகன்கள். அவர் தன் இறுதிக்காலத்தில் சொத்துக்களை இரண்டு பேருக்கும் சமமாக எழுதி வைத்தார். இளைய மகன் தனக்கு கிடைத்த சொத்தை தொழில் மூலம் ஒன்றுக்கு பத்தாக பெருக்கினான். அதில் வரும் லாபத்தை வைத்து முதியோருக்கு உதவுவது, ஏழை மாணவர்களின் கல்விச்செலவை ஏற்பது போன்ற தர்ம செயல்களை செய்தான். மூத்தவன் இவனுக்கு நேர் எதிர். அவனுக்கு கிடைத்த பணத்தால் உலகத்திலுள்ள அனைத்து கெட்ட பழக்கங்களும் அவனை ஆட்கொண்டன. அவனிடமிருந்த பணத்தை அனுபவிக்க காக்கா கூட்டம் மாதிரி நண்பர்கள் பலரும் வட்டமடித்தனர். அறிவே இல்லாத அவனை ‘உன்னிலும் சிறந்த அறிவாளி உலகில் இல்லை’ என்று புகழ்ந்தனர். காலப்போக்கில் சொத்தும் கரைந்தது. சுற்றிலும் இருந்த காக்கா கூட்டம் அவனை இகழ அரம்பித்தது.
‘‘அடேய்! உன் தம்பி உன்னை விட எட்டு வயசு இளையவன். உன் அப்பா கொடுத்த சொத்தை பல மடங்கு பெருக்கிவிட்டான்.  அன்பான மனைவி, குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்கிறான். அதுமட்டுமில்லாமல் நம்ம ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி ஏழைப்பிள்ளைகளை படிக்க வைக்கிறான். நீயும் இருக்கிறியே! உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா இப்படி சொத்தை இழந்து நடுரோட்டுக்கு வந்திருப்பாயா?’’ என்று உறவினர்கள் அவனை கடிந்து கொண்டனர். இதையெல்லாம் கேட்ட அவன் அழுதான். நாம் இவ்வளவு நாள் தவறு செய்து விட்டோமே.. என்று வருந்தினான். கெட்ட பழக்கங்களால் அவனை நோயும் துரத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அப்போது தம்பி அவனை பார்க்க சென்றான்.
‘‘அண்ணா! இனிமேலும் தீயவர்களுடன் சேர்ந்து அழியாதே. அப்பா கொடுத்த சொத்தைப் போல பத்துமடங்கு வைத்திருக்கிறேன். அதில் ஒரு பங்கை உனக்குத் தருகிறேன். இனியாவது திருந்தி வாழ்வதற்கு வழியைப்பார். மருத்துவமனை செலவை நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாதே’’ என ஆறுதல் கூறினான்.  
இப்படி பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்தால் நமக்கும் வளமான வாழ்க்கை அமையும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar