Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பித்தா... என பாடியது ஏன்? கலப்படமா...காத்திருக்கு தண்டனை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிதிநெருக்கடி போக்கும் சிவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2022
11:03


குபேரன் நிதி வேண்டி சிவபெருமானை வழிபட்ட தலம் திண்டிவனம் அருகிலுள்ள அன்னம்புத்துார் நிதீஸ்வரர் கோயில். இங்கு வழிபடுவோருக்கு நிதிநெருக்கடி, கடன் பிரச்னை தீர்ந்து பொருளாதார நிலை உயரும்.     
 பிரம்மா, திருமாலுக்கு இடையே தங்களில் உயர்ந்தவர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. தன் திருவடி அல்லது முடியை யார் கண்டு வருகிறார்களோ அவரே உயர்ந்தவர் என சிவன் தீர்ப்பளித்தார். பன்றியாக உருமாறிய திருமால் பாதம் நோக்கியும்,  அன்னமாக மாறிய பிரம்மா முடியை நோக்கியும் புறப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் பிரம்மா முடியைக் கண்டதாக பொய் சொல்லவே அவரை அன்னப்பறவையாக மாறும்படி சிவன் சபித்தார். பாவ விமோசனம் பெற இத்தலத்தில் குளம் ஒன்றை உருவாக்கி சிவபூஜை செய்தார் பிரம்மா. அதன் பயனாக சுயவடிவம் பெற்றதோடு இழந்த படைப்புத் தொழிலையும் மீட்டார். அன்னமாக வந்த பிரம்மா புதுவாழ்வு பெற்றதால் இத்தலம் அன்னம்புத்துார் எனப் பெயர் பெற்றது.
பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி என்னும் எட்டு வகைச் செல்வங்களுக்கு அதிபதி குபேரன். அவர் இத்தலத்தில் சிவனை வழிபட்டு வரம் பெற்றதால் சுவாமிக்கு ‘நிதீஸ்வரர்’ எனப் பெயர் வந்தது.  
 வெள்ளிக்கிழமை, பூசம் நட்சத்திரம், பவுர்ணமி, அட்சய திரிதியை, தீபாவளி நாட்களில்  சுவர்ண புஷ்ப அர்ச்சனை நடத்துகின்றனர். இதை தரிசிப்பவர்களுக்கு நிதிநெருக்கடி தீரும். பணம் கையில் தங்கும். கடன் பிரச்னை மறையும். குழந்தை வரம் பெற இங்குள்ள கனக திரிபுர சுந்தரி அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த வெண்ணெயைச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொன், பொருள் சேர கார்த்திகை மாதம் வளர்பிறை திரிதியையான ரம்பா திரியை அன்று அம்மனுக்கு நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
இங்குள்ள குருபகவானுக்கு வியாழக்கிழமையில் பரிகார பூஜை செய்தால் குருதோஷம் அகலும். இங்குள்ள கல்யாண சுப்பிரமணியருக்கு பூமாலை அணிவிக்க திருமண யோகம் அமையும். லட்சுமி கணபதி, கால பைரவர், தன ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள் இங்குள்ளன.
எப்படி செல்வது: திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் 9 கி.மீ.,
விசேஷ நாட்கள்: அட்சய திரிதியை, நவராத்திரி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00- 11:00 மணி, மாலை 5:00 - இரவு 8:00 மணி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar