மன்னர்கள் காலத்தில் கோயில்கள், அரண்மனைகளில் இருந்த நுாலகங்களுக்கு பெயர் சரஸ்வதி பண்டாரம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த நுாலகம் இருந்துள்ளது. இங்கு வருவோருக்கு சுவடிகளை படித்துக் காட்டவும், பிரதி எடுத்துக் கொடுக்கவும், பழைய சுவடிகளை புதுப்பிக்கவும் பணியாளர்கள் இருந்தனர்.