ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் குடிகொண்டிருப்பவள் கடகா சண்டி தேவி. இப்பகுதியை ஆட்சி செய்த கஜபதி மன்னர்களின் குலதெய்வமான இந்த அம்மனை செவ்வாய், சனிக்கிழமையில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். தீமை செய்யும் அரக்கர்களை அழிக்க பார்வதி எடுத்த அவதாரம் சண்டிதேவி. மேற்கு வங்க மக்களின் இஷ்ட தெய்வமான இவளுக்கு ‘மங்கள சண்டிகை’ என்று மற்றொரு பெயரும் உண்டு. அரண்மனை ஆஸ்தான பண்டிதர் ஹன்சா பண்டா ஒருநாள் மகாநதிக்கரையில் அசதியால் கண்ணயர்ந்தார். யாரோ எழுப்புவது போல் இருக்க திடுக்கிட்டு விழித்தார். ஆனால் யாரும் இல்லை. அன்றிரவு கனவில் தோன்றிய சண்டிகா தேவி, ‘நீ ஓய்வெடுத்த இடத்தில் நான் சிலை வடிவாக இருக்கிறேன். என்னை பிரதிஷ்டை செய்’’ எனத் தெரிவித்தாள். மன்னரின் உதவியுடன் கோயிலை எழுப்பினார். பண்டாவின் பரம்பரையினரே இன்றும் பூஜை செய்கின்றனர். கஜபதி மன்னரின் வாரிசுகள் நிர்வகித்து வருகின்றனர். அந்நியப் படையெடுப்பால் கோயில் அழிக்கப்பட்ட போது அம்மனின் சிலை பூரி ஜகந்நாதர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு பின்னர் கோயில் கட்டப்பட்டது. ஒடிசா பாணியில் அமைந்த இக்கோயிலில் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் சண்டிதேவி காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது காளிபூஜை நடக்கும். அஸ்வின்(ஐப்பசி) மாத தேய்பிறை அஷ்டமி முதல் வளர்பிறை தசமி வரை கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். எப்படி செல்வது புவனேஸ்வரில் இருந்து கட்டக் 45 கி.மீ.,