எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி எஸ்தர் விளையாட்டில் படுசுட்டி. படிப்புக்கும் அவளுக்கும் வெகுதுாரம். இப்படி இருக்கும் சூழலில் முழு ஆண்டுத் தேர்வு வந்தது. ஒருநாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த எஸ்தர் சமையலறைக்குள் ஓடினாள். ‘‘அம்மா... நாளை சயின்ஸ் எக்ஸாம் இருக்கு. எனக்கு சயின்ஸ் எதுவுமே புரியல. பேசாம நான் ஏதாவது சொல்லி லீவு எடுக்கவா’’ என்று கேட்டாள். அவ்வளவுதான். தான் தயார் செய்து வைத்திருந்த உணவை கீழே கொட்டினாள் அம்மா. ‘‘ஏம்மா... இப்படி செஞ்ச? இப்பப்பாரு உன்னோட ஒர்க் வேஸ்ட்டா போயிடுச்சு’’ என சொன்னாள். ‘‘இப்போ ஒரு மணி நேர வேலையும், சாப்பாடும்தான் எனக்கு வீணாச்சு. ஆனால் நீ நாளைக்கு எக்ஸாம் எழுத போகலன்னா, ஒரு வருஷமா படிச்ச படிப்பே வீணாயிடும். கடைசி நேரத்துல இப்படி செய்யலாமா?’’ என்றாள். தன் தவறை உணர்ந்த அவள் அக்கறையுடன் படிக்க ஆரம்பித்தாள்.