அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒருநாள் அவரை சந்திக்க வந்த ஒருவர், ‘‘ஐயா! எனக்கு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். அதை என்னால் மறக்க முடியவில்லை. தீர்வு சொல்லுங்கள்’’ என்று கேட்டார். சிறிது நேரம் யோசித்தவர், ‘‘ உங்கள் கோபம் தீர, அவரை விமர்சித்து கடிதம் எழுதுங்கள். என்னிடம் கொண்டு வாருங்கள்’’ என்றார். அவரும் கடிதத்துடன் வந்தார். ‘‘நீங்கள் கூறியபடி எழுதியுள்ளேன். இதை தபாலில் அனுப்பவா’’ எனக் கேட்டார். ‘‘உங்கள் கோபம் குறைந்ததா’’ என லிங்கன் கேட்டதற்கு, ‘‘ஆம்’’ என சொன்னார். ‘‘சரி. கடிதத்தை குப்பைத்தொட்டியில் போடுங்கள். அவரை மன்னியுங்கள். மனச்சுமை குறையும்’’ என்றார். பிறர் செய்யும் தவறுகளை மறந்தால் மனம் லேசாகும். அதுவே மன்னித்தால் மன நிறைவு உண்டாகும். இதை பின்பற்றினால் எப்போதும் அமைதி இருக்கும்.