Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நாகதோஷம் தீர்க்கும் அம்மன் கயிறு கட்டினால் கல்யாணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
துணிவே துணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03

ராஜிராதா

மனிதனை அதிகமாக ஆட்டிப் படைப்பது பயம். இதுவே நோய்களுக்கு  காரணம். குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள சந்திரபாகா தேவி கோயிலை இப்படிப்பட்டவர்கள் தரிசித்தால் ‘துணிவே துணை’ என்ற எண்ணம் வரும்.
 
முதல் யுகமான சத்திய யுகத்தில் உருவான கோயில் இது. சரஸ்வதி, கபிலா, ஹிரண்யா என்னும் ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் கோயில் உள்ளது. சந்திரனின் பிறை போல கடல் இங்கு இருப்பதால் சந்திரபாகா எனப்படுகிறது.

 தாட்சாயிணி சிவபெருமானை திருமணம் செய்தாள். இதனால் அவளின் தந்தை தட்சன் கோபம் கொண்டு தான் நடத்திய யாகத்திற்கு மருமகனை அழைக்கவில்லை. தாட்சாயிணி நியாயம் கேட்க, அவளை தட்சனோ அவமானப்படுத்தினான். அவள் யாக குண்டத்தில் குதித்து உயிர் விட்டாள். மனைவியின் உடலைத் தோளில் தாங்கியபடி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதையறிந்த தாட்சாயிணியின் சகோதரரான மகாவிஷ்ணு சக்கரத்தால் அவளது உடலை 51 கூறுகளாக வெட்டி  சிதற விட்டார். அவளது தோள்பட்டை இத்தலத்தில் விழுந்தது. அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அம்மனுக்கு சந்திரபாகா தேவி எனப் பெயர் சூட்டப்பட்டது.
மூன்று வாசல்கள் கொண்டது இக்கோயில். நடுவாசல் வழியாக நுழைந்தால் கருவறையில் சந்திரபாகா தேவி உக்கிரமாக காட்சியளிக்கிறாள். வழிபடுவோருக்கு கருணையுடன் வரம் தருகிறாள். அம்மனின் அம்சமாக பிண்டக்கல் ஒன்றில் செந்துாரம் பூசியபடி தனியாகவும் பிரதிஷ்டை செய்துள்ளனர்
வக்ர துண்டு என்னும் கால பைரவர், கார்த்திகேயர், கணேஷ், குரு தத்தாத்ரேயர் சன்னதிகள் இங்குள்ளன. குஜராத்திய பாணியில் விமானம், குழி மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கூடலில் நீராடி அம்மனை தரிசித்தால் முன்வினை பாவம் பறந்தோடும். கார்த்திகை மாத பவுர்ணமியில் திருவிழா நடக்கிறது.
கோயிலுக்கு பின்புறத்தில் ராமர் கோயில் உள்ளது. இத்தலத்தில் இருந்து கிருஷ்ணர் இறுதி மூச்சை விட்டு வைகுண்டம் புறப்பட்டார். சந்திரபாகா தேவி கோயிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் சோமநாத் சிவன் கோயில் உள்ளது. இங்கு வழிபட்ட சந்திரனுக்கு சாபம் நீங்கியது.
எப்படி செல்வது: விராவலில் இருந்து 8.கி.மீ.,
விசேஷ நாள்: நாகபஞ்சமி, நவராத்திரி, கார்த்திக் பூர்ணிமா, மகாசிவராத்திரி
நேரம்:  அதிகாலை 5:00 – 12:00 , மாலை 4:00 –  9:00 மணி
தொடர்புக்கு: 02871 – 233391
அருகில் உள்ள தலம்:  சோமநாத் ஜோதிர்லிங்க கோயில் (4கி.மீ.)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar