Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

துணிவே துணை காலம் மாறும்.. கவலை தீரும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கயிறு கட்டினால் கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2022
02:03


எத்தனையோ வரன் பார்த்தும் திருமணம் நிச்சயம் ஆகாமல் தள்ளிக் கொண்டே போகிறதே என நீங்கள் கவலைப்படலாம். அதிலிருந்து விடுவிக்க காத்திருக்கிறார் புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்துார் வரதராஜப்பெருமாள்.  இங்கு தரப்படும் ராமர் – சீதை காப்புக்கயிறை கட்டினால் கெட்டிமேளம் வீட்டில் ஒலிக்கும்.  
500 ஆண்டுகளுக்கு முந்திய இக்கோயில் இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. பிருகு முனிவரின் மகளாக அவதரித்த மகாலட்சுமி இத்தலத்தில் வரதராஜப் பெருமாளை திருமணம் புரிந்தாள். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற கோலத்தில் சுவாமி அருள்புரிகிறார். பெருமாளைக் கைபிடித்த மகிழ்ச்சியில் பெருந்தேவித்தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள்.
  அவதார காலம் முடிந்து வைகுண்டம் கிளம்பும் முன், ராமர், சீதையுடன் இங்கு தங்கியிருந்தார். அர்த்த மண்டபத்தில் சீதாராமர் சன்னதி உள்ளது. ராமர் முழங்கால், இடுப்பு, கழுத்தை வளைத்தபடி சீதையுடன் ஒயிலாக நிற்கிறார். அருகில் அனுமன் இடக்கையில் சூரியக்கொடி ஏந்தியும், வலக்கையால் வாய் பொத்தியும்  இருக்கிறார். இக்கோயிலில் ஏப்.11ல் சீதாராமர் திருக்கல்யாணம் நடக்கிறது. அப்போது பூஜையில் வைக்கப்படும் காப்புக்கயிறுகள் ஏப்.13 அன்று காலை 8:00 – மதியம் 1:00 மணி, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை பக்தர்களுக்கு தருவர். இதைக் கட்டினால் திருமணம் நடக்கும்.    
பெருந்தேவி தாயாருக்கு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனம், மாலையில் அர்ச்சனையின் போது பங்கேற்பவர்களின் விருப்பம் நிறைவேறும். இங்கு ஆண்டாள் சூடிய மாலையை வீட்டில் வைத்து வழிபட்டாலும், பெருந்தேவிதாயாருக்கு எட்டு வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்தாலும் திருமணம் நடக்கும்.  
    
. கருவறை எதிரில் அஷ்ட நாக ஆபரணம் சூடியபடி கருடாழ்வார் உள்ளார். சுவாதி நட்சத்திரத்தன்று இவரை எட்டு முறை வலம் வந்தால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.

எப்படி செல்வது
புதுச்சேரி – கடலுார் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar