Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளில் ... வைகாசி விசாக விரதமுறையும் பலனும்! வைகாசி விசாக விரதமுறையும் பலனும்!
முதல் பக்கம் » துளிகள்
ஒரு வரியில் 63 நாயன்மார்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
04:06

இளையான்குடி மாறர், முனையாடுவார், சிறப்புலியார், இடங்கழியார், மூர்க்கர், அப்பூதி அடிகள் - சிவனடியார்களுக்கு உணவளித்தவர்கள்.
நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியர் - கோயில்களில் விளக்கேற்றி தொண்டு செய்தவர்கள்.
கணநாதர், நேசர், பெருமிழலை குறும்பர்- சிவத் தொண்டர்களுக்கு உதவி செய்தவர்கள்
திருநாளைப்போவார், தண்டியடிகள்- குளம் வெட்டியவர்கள்
சோமாசி மாறர்- தினமும் யாகம் செய்தவர்
ஐயடிகள் காடவர் கோன்- சிவத்தலத்துக்கு ஒரு பாடல் பாடியவர்
திருமூலர்- திருமந்திரம் ஆசிரியர்
காரி - கோயிலைப் புதுப்பித்தவர்
வாயிலார் -மனதால் சிவனை பூஜித்தவர்
பூசலார் - உள்ளத்தில் சிவனுக்கு கோயில் கட்டியவர்
நீலகண்ட யாழ்ப்பாணர்- யாழிசைத்து சிவனை வணங்கியவர்
அமர்நீதி- அடியார்களுக்கு ஆடை வழங்கியவர்
மெய்ப்பொருளார், ஏனாதிநாதர்- தன்னை வெட்டிய எதிரியையும் திருநீறு பூசியதால் மன்னித்தவர்கள்.
திருக்குறிப்பு தொண்டர்- அடியார்களின் ஆடைகளை சலவை செய்தவர்
குங்கிலியக்கலயர்- கோயில்களுக்கு சாம்பிராணி துாபமிட்டவர்
முருகர்- பூஜைக்குரிய மலர்கள் பறித்தவர்
உருத்திர பசுபதியார்- ருத்ர மந்திரம் ஜபித்தவர்
ஆனாயர்- புல்லாங்குழல் இசைத்து பசுக்களை பராமரித்தவர்
கண்ணப்பர்- சிவனுக்கு கண்தானம் செய்தவர்
திருநீலகண்டர்- மனைவியின் கண்டிப்பால் பெண்ணாசை துறந்தவர்
சுந்தரர்- நண்பராக வாழ்ந்து சிவனை பூஜித்தவர்
இயற்பகையார்- மனைவியை தானமாக கொடுத்தவர்
கலிக்காமர், விறல்மிண்டர்- சிவனை  துாது விட்டும், அடியார்களை வணங்காமலும் சென்ற சுந்தரரைக் கண்டித்தவர்கள்.
எறிபத்தர்- சிவனுக்குரிய மலர்க்கூடையைப் பறித்த யானை, பாகனை கொன்றவர்
மானக்கஞ்சாறர்- மணமாக இருந்த மகளின் கூந்தலை சிவனுக்கு வழங்கியவர்
அரிவாட்டாயர்- நைவேத்யம் தவறுதலாக சிந்தியதால் கழுத்தை அறுத்தவர்
மூர்த்தி-  சந்தனக்கட்டை இல்லாததால், கையை தேய்த்து சிவனுக்கு தொண்டு செய்தவர்
சண்டேசர்- சிவனின் நைவேத்யம், மாலையை பிரசாதமாக பெற்றவர்
திருநாவுக்கரசர்- பாம்பு தீண்டி இறந்த அடியவரின் மகனை பிழைக்கச் செய்தவர்
நின்றசீர் நெடுமாறர்- மதுரை மன்னர், மடப்பள்ளி சாம்பல் பூசி வயிற்றுவலி தீரப் பெற்றவர்
குலச்சிறையார்- சம்பந்தர் மூலம் சைவ சமயத்தைக் காத்தவர்.
சடையனார்- சுந்தரரின் தந்தையார்
திருநீலநக்கர்- சிவலிங்கத்தில் வலை பின்னிய சிலந்தியை வாயால் ஊதிய மனைவியைப் பிரிந்தவர்
திருஞான சம்பந்தர்- பார்வதியிடம் ஞானப்பால் அருந்தியவர்
மூர்க்கர்- சூதாட்டத்தின் மூலம் சிவத்தொண்டு செய்தவர்
சாக்கியர்- கல்லை மலராகக் கருதி சிவன் மீது எறிந்து வழிபட்டவர்
கழறிற்றறிவார்- சிவனருளால் மிருகம், பறவைகளின் பேச்சையும் அறியும் திறன் பெற்றவர்
கணநாதர்-தொண்டு செய்ய விரும்பிய சிவனடியார்களுக்கு பயிற்சி அளித்தவர்
கூற்றுவர்- சிவனின் திருவடியை தலையில் தாங்கும் பேறு பெற்றவர்.
புகழ்ச்சோழர்-  போரில் தன்னால் கொல்லப்பட்டவர்களைக் கண்டு வருந்தி தீக்குளித்தவர்
நரசிங்க முனையரையர்- திருவாதிரையன்று  பொன்னும், உணவும் தானம் செய்தவர்
அதிபத்தர்- தனக்கு கிடைத்த பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்
கலிக்கம்பர்- அடியாரின் திருவடியைக் கழுவ தண்ணீர் ஊற்றாத மனைவியின் கையை வெட்டியவர்.
சத்தி-சிவனடியார்களை இகழ்ந்தவர்களின் நாக்கை அறுத்தவர்
வாயிலார்-மவுனவிரதம் இருந்து சிவனைப் பூஜித்தவர்
செருத்துணையார்- சிவனுக்குரிய பூவை முகர்ந்த மனைவியின் மூக்கை வெட்டியவர்
புகழ்த்துணையார்- அபிஷேக குடம் சிவலிங்கம் மீது தவறி விழுந்ததால் வருந்தியவர்
கோட்புலியார்- சிவனுக்குரிய நெல்லை எடுத்து சாப்பிட்ட உறவினர்களை கொன்றவர்
கோச்செங்கட்சோழர்- மாடக்கோயில்கள் கட்டியவர், சிலந்தியாக இருந்து சிவனருளால் மன்னராக பிறந்தவர்

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar